நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...
(அந்த அழகான பெண் நிருபர் சிரிப்பு போலீஸ் காண போலீஸ் ஸ்டேஷன் செல்கிறர்)
ஏட்டு : யாருமா நீ?
நிருபர் : இங்க அழகா, அறிவா ரமேஷ்னு ஒருத்தர்....
ஏட்டு : அப்படி யாரும் இங்க இல்லமா.
நிருபர் : இல்ல சார் இந்த ஸ்டேஷ்ன்தான் சொன்னாங்க.
ஏட்டு : ரமேஷ்னு ஒருத்தர் இருக்காரு ஆன நீ அழகா இருப்பாரு சொல்றியே, அதுலயும் அறிவு ரொம்ப ரொம்ப கஷ்டம்.
நிருபர் : தப்பா தகவல் சொல்லி இருக்காங்க போல. அவர பாக்கலாமா?
ஏட்டு : லாக்கப் உள்ள விசாரனை நடக்குது போய் பாருங்க.
நிருபர் : ஓ!! என்ன விசாரனை?
எட்டு : மார்க்கட்ல வாங்கின மாமூல் சரியா பிரிச்சி கொடுக்கல சொல்லி கைதி எல்லாம் சேர்ந்து அவர அடிச்சிட்டு இருக்காங்க.
(நிருபர் வருவதை கண்டு ரமேஷ் கைதிகளிடம் கெஞ்சி வெளியில் வருகிறார். லாக்கப் பார்த்து...... பிச்சிடுவேன் பிச்சி!!! கைதி கொடுரமாக முறைக்க. கண்ணாலே அவன் காலில் விழுகிறார்)
ரமேஷ் : (பல் எல்லாம் காட்டி) சொல்லுங்க!!!
நிருபர் : (என்ன இப்படி இளிக்குது... இதான் சிரிப்பு போலீஸா) Good Morning!!
ரமேஷ் : (பெருமையுடன்) My name is Ramesh.
நிருபர் : But, நான் உங்க பெயர் கேக்கவில்லை. வணக்கம் சொன்னேன்.
ரமேஷ் : ஹி..ஹி..ஹி... எனக்கு இங்லிஷ் வராது. தமிழ்லா....
நிருபர் : சரி. சரி. விநாயகர் சதுர்த்தி வருது.. நீங்க வாழ்த்து சொல்லனும்.
ரமேஷ் : அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேக்கனும்.
நிருபர் : சினிமா சம்மந்தம் இல்லாம கேளூங்க.
ரமேஷ் : (பிகர் ரெம்பா உஷார இருக்கே. நமக்கு வேற ஒன்னும் தெரியாதே)நீங்க ரொம்ப அழக இருக்கிங்க. உங்க பெயர் என்ன?
நிருபர் : குஷ்பு டாடி...
ரமேஷ் : என்னாது டாடியா?
நிருபர் : ஆம டாடி. நான் உங்க அண்ணன் பொண்னுக்கு தோழி. அவதான் உங்க விலாசம் கொடுத்தா...
ரமேஷ் : ஆஹா!! வடை போச்சே (வாழ்த்து சொல்லாமல். சோகத்துடன் லாக்கப் நோக்கி செல்கிறார்)
நிருபர் : இது சிரிப்பு போலீஸ் இல்ல லூஸு போலீஸ்.. இதுக்கு அவங்க எவ்வளோ தேவலாம்..
டிஸ்கி : ரமேசுசுசு... இனி என்ன கலாய்ப்ப?
.