Sunday, September 26, 2010

இறைவனிடம் ஒரு வரம்....

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் மணிபூரகம் வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் வயிற்றின் மைய பகுதியில் இருந்து ஒரு தீ ஜுவாலை எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன். என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது. உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்வி எதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது என்னை நோக்கும் பொழுது உணர்ந்து இருக்கிறேன்.

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் கேளி பேச்சுகளும், அவமாணங்களும். எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் குறைந்தது ஆனால் உள் எறியும் தீயின் வேகம் கூடியது. அனல் பொருக்க முடியாமல் பல முறை தாயின் கருவரையில் சென்று ஒளிந்து கொள்ள ஆசை பட்டதுண்டு. இறைவன் சன்னிதியில் மண்டி இட்டு என் சுயம் மறக்க செய் என்று இரஞ்சியது உண்டு. 

துறைகள் பல மாறி விடை தேடினேன். விடை கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் குறைந்தது. மனம் தேடலை மறந்து கால வெள்ளத்தில் அமைதியாக நீந்தி கொண்டு இருந்தது. எரிந்து கொண்டு இருந்த இடத்தில் வெறும் சாம்பலும் கரியும். இனி கவலை இல்லை அமைதியாக காலத்தை கழிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில் எனக்குள் எதோ ஒரு மாற்றம். மீண்டும் அந்த அனலை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.

கரியும் சாம்பலும் என்று என்னிய இடத்தில் ஒரு எரிமலை உறங்கி கொண்டு இருந்தது. அது வெடித்து சிதறி தீ குழம்பு உடல் முழுவதும் பரவுகிறது. இதயக்கூட்டை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது.  இறைவனிடம் மீண்டும் இரஞ்சுகிறேன் நான் முன்பே தேடி தேடி சோர்ந்து விட்டேன் அதனால் இந்த தீயை அனைத்துவிடு. என்னை அமைதியாக வாழ விடு.

டிஸ்கி : மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதர சகோதரிகளுக்கு சமர்பணம்....


பதிவு புரியலனா இங்க போய் படிங்க அருமையான விளக்கம்.... மனுஷன திருந்தவிட மாட்டறானுங்க.... பதிவ படிச்ச விளைவு இங்க

Wednesday, September 15, 2010

வள்ளல்கள் அழியவில்லை..

தனது பதினாறு வயதுக்குரிய துள்ளும் நடையுடன் வந்து கொண்டு இருந்தான் ரவி. காற்றில் அலைபாயும் கேசம், ஒரு நொடி பார்த்த திசை மறுநொடி பார்க்காத கண்கள், காற்றில் தாளம் இடும் கைகள், பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செருக்கான நடை, சினிமா பாடலை உச்சரிக்கும் உதடுகள் இப்படி அறிமுகம் செய்ய ரவி அத்தனை அதிர்ஷ்டம் செய்து இருக்கவில்லை.

பல நாள் எண்ணெய் காணாத கேசம், சோர்ந்துபோன விழிகள், நாள் முழுவது வேலை செய்து களைத்து போன கைகள், தளர்வான நடை, உறுதியான மனம் இதுதான் வாழ்க்கை அவனுக்கு கொடுத்து இருந்தது. தந்தை பக்கவாதம் வந்து படுத்த பின்னர் ஆரம்பித்த அவனது பொருள் தேடல் இன்னும் தொடர்கிறது.

நெரிஞ்சி முள்ளாய் எப்பொழுதும் அவனை வாட்டும் வறுமையை இன்று சம்பள நாள் என்ற நினைவு குருஞ்சி பூபோல் அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி மறக்க செய்தது. நான் கிளம்பறேன் அண்ணெ. பலர் அவரை அண்ணன் என்று அழைத்தாலும் ரவியிடம் மேஸ்திரிக்கு தனி பாசம் உண்டு. எதிர்த்து பேசமாட்டான், வேலை சுத்தமாக இருக்கும், எந்த கெட்டபழக்கம் இல்லாதவன். அதனால் அவன் மேல் தனி வஞ்சையுண்டு.

சரி, இந்தா உன் சம்பளம். மேஸ்திரி கொடுத்த காசை எண்ணிபாக்காமல் சட்டை பையில் வைத்தான். அவனுக்கு மேஸ்திரி மேல் அவ்வளவு நம்பிக்கை. என்னிபாருடா என்று சொன்னவறுக்கு ஒரு புன்னகை பதிலாக கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். இன்று மளிகை கடை பாக்கி கொடுத்துவிடலாம் என்று சாலை கடக்க போனவன் கண்களிள் பட்டது அந்தா காட்சி. ஒரு முதியவர் மயங்கி கிடந்தார்.

ஓடி சென்று அவரை தூக்கினான். மூச்சி இருந்தது பக்கதில் இருந்த கடையில் இருந்து சோடா வங்கி வந்து முகத்தில் தெளித்தான். மெல்ல கண்விழித்தவரிடம் வீட்டு விலாசம் கேட்டு அவரை ஆட்டோ வைத்து அழைத்துபோய் வீட்டில் இரக்கிவிட்டான். அந்த முதியவர் நேற்றிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. பென்ஷன் வாஙக வந்து கிடைக்காமல் திரும்பி நடந்து வரும்போது மயங்கி விழுந்து இருக்கிறார். சட்டை பையில் இருந்து ஐனூறு ருபாய் எடுத்து அவர் எவ்வளவோ மறுத்தும் கேக்காமல் அவர் கையில் திணித்தான்.

மளிகை கடை அண்ணாச்சி நல்லவர். அடுத்த மாதம் தருகிறேன் என்று சொன்னால் ஒன்றும் சொல்ல மாட்டார். அம்மா திட்டும் சமாளித்து கொள்ளலாம். பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செருக்காக வீடு நோக்கி நடக்க தொடங்கினான். இப்பொழுது அவன் நடையில் தளர்வு இல்லை துள்ளள் இருந்தது.கைகள் காற்றில் தாளம் போட்டது.உதடுகள் எதே சினிமா பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தது.

யார் சொன்னது வள்ளல்கள் ஏழு என்று. அள்ளி கொடுத்த நேரத்தில் தன் வறுமை நினைக்காத இந்த ரவியும் ஒரு வள்ளல்தான். இது போன்ற வள்ளல்கள்தான் இன்னும் மனிதம் அழியாமல் வாழவைத்து கொண்டு இருக்கிறார்கள்.

டிஸ்கி : நேத்து வரைக்கும் நல்லாதானட இருந்த டெரர்... இன்னைக்கு இப்படி அனியாயம போய்ட்டியே.... மாலை வாங்க கூட காசு கொடுக்காம போய்டியே...

.

Friday, September 10, 2010

ஆண்கள் சமஉரிமை....

முஸ்கி : இது அடுப்படியில் சிக்கி தவிக்கும் அபலை ஆண்கள் உரிமைக்கு கொடுக்கபடும் ஒரு குரல்... கணவணை சமைக்க சொல்லிவிட்டு Farm ville விளையாடும் பெண்கலுக்கு எதிரான குரல்...

இன்று என் சகோதரியுடன் தொலைபேசியில் உரையாடி கொண்டு இருந்தேன். எப்பொழுதும் நான் பேசும்போது இடைக்கு இடை கமெண்ட் அடிக்கும் மச்சான் குரல் மிஸ்ஸிங்.... எங்கமா அவரு கேட்டா “அவர் டீ போட்டு இருக்காருனா”... யாருக்கு??.... எனக்கும் அவருக்கும்....... நீங்க என்ன பண்றிங்க..... நான் Farm ville விள்ளாடறேன். ஒரு நாள் சமைக்கட்டும் தப்பு இல்லை...

அப்பாவி திருமணமாகிய ஆண் மக்களே உங்களுக்குதான் எத்தனை எத்தனை பிரச்சனை. காலையில் எழுந்து மனைவிக்கு காப்பி போடனும். அதில் எதாவது குறை சொல்லி அதை உங்கள் முஞ்சியில் ஊத்துவார் (அதை துடைத்துவிட்டி). சமையல் அறையில் புகுந்து காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிக்க வேண்டும் (அவங்களா?? சத்தமா பேசாதிங்க துக்கம் கலஞ்சிட்டா நம்ம ஆளு திட்டு வாங்குவான்). 

பின்னர் அடம் பிடிக்கும் பிள்ளையை குளிப்பாட்டி,  உணவு கொடுத்து, சீருடை அணிவித்து, சாக்ஸ் தேடி, ஷு பாலிஷ் போட்டு நீங்கள் தயார் செய்தால்.. உங்க மனைவி வந்து.. இருங்க நான் போய் ஸ்கூல் பஸ் ஏத்திவிட்டு வரேன்... (உதவி பண்றாங்களாம்...). பஸ் எத்திவிட்டு உடனே வராங்களா??? வரமாட்டங்க சார்!!! அங்க அவங்கள மாதிரியே பல அம்மணிங்க கனவனுக்கு உதவி பண்ண வந்து இருப்பாங்க. ஒரு பத்து நிமிஷம் நின்னு அவங்ககூட எல்லாம் பேசிட்டு... புயல் மாதிரி வீட்டுக்குள்ள வருவாங்க, மின்னல் மாதிரி பாத்ரூம் உள்ள போவாங்க (குளிக்கிறாங்களா தெரியாது... வாரத்துக்கு இரண்டு சோப் தீருது).

குளிச்சிட்டு வந்து.. சாரி பாத்ரூம்ல இருந்து வெளிய வந்து (உண்மை தெரியாம பேசகூடது..). அதுக்கு அப்புறாம் அவங்க மேக்கப் ஸெஷன் (இதை மன்னிச்சிடலாம், இல்லைனா ஊர்ல பாதிபய கண்ணு அவிஞ்ச பாவத்துக்கு நாம பொறுப்பு ஆகிடுவோம்). இங்க மறுபடி அர்ச்சனை.. கிரீம் தீர்ந்து மூனு நாள் ஆச்சி, நீங்க இன்னும் பௌடர் வாங்கி வரலியா? சொல்ற வேலை ஒன்னுகூட செய்றது இல்லை இருக்கிங்களா...? ச்ச (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபா).

சாப்பாடு ரெடியா அப்படினு ஒரு அதிகார குரல். நம்ம ஆளு அவனுக்கு தெரிஞ்ச பிரட் சண்ட்விச், உப்புமா, தோசை இப்படி எதாவது செஞ்சி கொண்டு போய் நீட்டுவான். என்ன சண்ட்விச் இது, உப்புமா என் இப்படி கொழஞ்சி போச்சி, தோசை என்ன இப்படி கருக்கி வச்சி இருக்கிங்க, ஒரு நாள் ஒழுங்க சமைக்க துப்பு இல்லை. இப்படி எதவது குறை சொல்ல வேண்டியது... (அவ்வ்... அவ்வ்வ்.. அவ்வ்வ்வ்.. எழுதர எனக்கே இவ்வளோ அழுகை வருது..). 

அதுக்கு அப்புறம் அபீஸ் கிளம்பி செருப்பு போடும்போது...... புது செருப்பு கேட்டு பத்து நாள் அச்சி, வெறு பத்து ஜேடி செருப்பு வச்சிட்டு மனுஷி எப்படி வேலைக்கு போறது? (என்ன லுக்கு? உங்களுக்கு அதே பிஞ்சி போன ஷுதான்..). இப்பொ டிரைவர் வேலை. பத்திரமா கொண்டு போய் அவங்க ஆபிஸ் வாசபடில இறக்கிவிட்டு. பைக் ஸ்டார்ட் பண்ணி அவங்க கண்ணுல படாத இடமா வண்டி நிறுத்தி ஒரு பெருமூச்சி விடுவிங்க பாருங்க... அதான் உங்க ஆகஸ்ட் 15....

டிஸ்கி : இது காலைல மட்டும் நடக்கற கொடுமை. தப்பி தவறி எப்பவாது என் வீட்டுகு வர பெண்பதிவர் யாரவது சண்டைக்கு வந்திங்க. அப்புறம் மதிய கொடுமை, மாலை கொடுமை எல்லாம் எழுதுவேன்... ஆண் பதிவர்களே நீங்க பொங்கி எழுங்கள்... ஆண்கள் சம உரிமைக்கு போராடுவேம்...

Wednesday, September 08, 2010

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....


முஸ்கி : இது நான் சுய நினைவு இல்லாமல் எழுதிய பதிவு

பதிவுலகி எனக்கு அறிமுகமான அழகிய மனம் கொண்ட சிலரில் சிரிப்பு போலீஸ் @ ரமேஷ் மிக முக்கியமானவர். VKS vs VAS என்று கோகுலத்தில் சூரியனில் மோதி கொண்டாலும், கமெண்ட்ல் கட்டி புரண்டு சண்டை இட்டாலும், பதிவுகளிள் பல்பு கொடுக்கல் வாங்கல் இருந்தாலும் திரைக்கு பின்னால் எப்பொழுதும் ஒரு புன்னகையுடன் வரவேற்று படைப்புகளை பாராட்டவும் தவறுகளை சுட்டிகாட்டவும் தவறாதவர் (பன்னாடை இதுக்கே ஒன்னும் தெரியாது). 

காலையில் கண்ட திரைபடத்தை மாலையில் மறந்துவிடும் நமக்யிடையில் என்றே கண்ட (கண்ட) திரைப்படத்தில் இருந்து புதிர் போட்டுஅசத்துவார். அவரை எவ்வளவு நையாண்டி செய்தாலும் நகைச்சுவையாக எடுத்து கொள்வார் (சூடு, சொரனை, மானம், ரோஷம் ஒன்னும் கிடையாது...).

தினமும் ” தி ஹிந்து “ நாளிதழ் படிப்பதை வாடிக்கையாக கொண்டு இருத்தாலும் ஆங்கிலம் தெரியாது என்று தன்னை தனே நையாண்டி செய்து நம்மை சிரிக்க வைப்பவர்.ஒரு மென்பொருள் அலுவலகத்தில் ஜனரல் மேனேஜராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் தன்னை பதிவுலகில் டேமேஜர் என்று அழைப்பதை அன்போடு அனுமதிப்பவர்.

சிறிதும் ஈகே இல்லாத மனிதர்.  அவரைபற்றி பேசினால் இன்று முழுவதும் பேசலாம் (ஆனால் கேட்க ஆள் இல்ல). இத்தனை சிறந்த பண்புகள் மிக்க நமது ரமேஷ் மண்ணில் தோன்றிய நன்னாள் இது. அவர்..

ஆன்டிகளின் அண்னனாக (சாரி)
பெண்களின் கண்னணாக!
நமது மனதில் ஒரு மன்னனாக!
பதிவுலகில் ஒரு பவளமாக!
மண்ணில் ஒரு மாணிக்கமாக!
பாரில் ஒரு பகலவனாக...

நற்பெயரும், புகழும் பெற்று நலமுடனும் வளமுடனும் நீடுடி வாழ முழு மனதுடன் இறைவனை பிராத்திகிறேன்....

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரமேசு....

கலை நிகழ்ச்சி:

வெடி சிரிப்பு வெங்கட் வாழ்த்து ஐடியா.
நக்கல் நாயகன் அருண்பிரசாத் நையாண்டி.
இளம் புயல் இம்சை அரசன் பாபு கவிதை.
.

Thursday, September 02, 2010

டெரர் காதல்....

வாங்க அப்பு!! ஊர்ள இருக்க எல்லா பயலும் இப்போ பண்ற ஒரே வேலை காதல்... அட இந்த கொலைகார பசங்க வெளியூர்காரன், ரெட்டை வால், இலுமினாட்டி இவனுங்க எல்லாம் திடிர்னு சிரிக்க வைக்கரானுங்க, அழவைக்கராங்க, வெக்கபட வைக்கராங்க கேட்டா காதலிக்கறேன் சொல்றானுங்க... அதான் நானும் காதலிக்க போறேன்... சைந்தவி மாதிரி பொண்ணு கிடைக்க நான் ஒன்னும் சிபி இல்ல. அதனால வாங்க என்னோட சனியன காட்டரேன்.

அதோ நடந்து வருகிறாள் என் காதல் தோ-வதை... ச்சீ தேவதை. பறட்டை தலை, சோடபுட்டி கண்ணாடி, உதட்டுக்கு வெளியே துருத்தி நிற்க்கும் இரண்டு அழகிய பல், பத்து நாள் துவைக்காத கப்படிக்கும் சுடிதார், நேற்று சூப்பர் மார்க்கட்டில் திருடிய வாட்ச், வாத்து நடை, பிஞ்சி போன செருப்பு... இன்று முழுவது பார்த்து கொண்டு இருக்கலாம் (வேற பக்கமா). இதோ அருகில் வந்துவிட்டாள்...

ஹாய்!!  ஆஹா... லாரியில் முன் வீலில் அடிபட்ட நாய் மாதிரி என்ன ஒரு குரல்!! ஈயத்தை காய்ச்சி ஊற்றியாது போல் இருந்தது காது. சொல்லு டியார்!! பதிலுக்கு நானும் அதே லாரியில் பின் வீலில் அடிபட்ட நாய் மாதிரி பேசி பழிவாங்கினேன்.... நேத்து பூர நான் தூங்கவே இல்லடா.. மிச்சம் உள்ள எச்சி சோறுக்கு வால் ஆட்டும் நாய் போல் சினிங்கியது என் தேவதை.  ஏண்டா செல்லம்? என்று கேட்டு தொலைத்தேன். ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சி உனக்காக ஒரு கவிதை எழுதினேன்.

இதற்க்கு எல்லா காரணம் ஜில்லு. அவர் மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு தனி பாசம். அது இப்பொ கொலை வெறியாகமாறி இருந்தது. இதோ கவிதை ஆரம்பித்து விட்டாள். காதை மூடி கொள்ளுங்கள்.

கட்டி வச்ச கெட்டி சோறே
கெட்டுபோன மிச்ச சோறே!
ஃப்ரியா கிடைக்கும் ஃபாரின் பீரே
பிரிந்து போகதே என் உயிரே!

(இப்போ காதல்ரசம்/சாம்பார் மிக்க எங்கள் உரையாடல்)

அவள் : என்கிட்ட உனக்கு என்னடா பிடிக்கும்

நான் : உன் கையில் கட்டி இருக்க வாட்ச்

அவள் : நீ இப்படி எச்சகிளதனமா கேப்பனு தெரியும் அதன் நான் இரண்டு திருடி வந்தேன். இந்தா....

நான் : என்கிட்ட உனக்கு என்னடி பிடிக்கும்?

அவள் : இப்படி எதை கொடுத்தாலும் மான, ரோசம் இல்லாம வங்கி வச்சிக்கிரபார் இதான் பிடிக்கும்....

இருவரும் : ஹா.. ஹா...ஹா..

(நாங்கள் சிரித்த ஒலி கேட்டு இரண்டு கிளி செவிடு ஆனது, நாலு புறா செத்து விழுந்தது, ஒரு பல்லி பைத்தியாம் ஆனது..)

டிஸ்கி : இந்த காதல் காவியம் ஆதரவு இல்லாமல் தவிக்கும் அனைத்து கள்ள காதலர்க்கும் சமர்ப்பணம். (ஜில்லு இனிமே கவிதை எழுத மாட்டேன் மாரியாத்த கோயில்ல வந்து சத்தியம் பண்ணு... இல்ல நான் எழுதறத நிறுத்த மாட்டேன்.. :)))  )

.