Monday, October 04, 2010

பிரபல பதிவர கண்டு பிடிச்சிட்டேன்...

முஸ்கி : மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்.

மக்கா ஒரு சந்தோஷமான விஷயம்... நான் பிரபல பதிவர்னா (அதிர்வு... பயபடாதிங்க பயபடாதிங்க அந்த வார்த்தை சொன்னாலே சும்மா அதிரும் இல்ல...) யார்னு கண்டு பிடிச்சிட்டேன்.  நம்புங்கபா உண்மையாதான். பிரபல பதிவர்னா யாரு தெரியுமா?? 100 மேற்பட்டோர் பின் தொடரனும். குறைந்தது 50 பதிவு எழுதி இருக்கனும். எது எழுதினாலும் ஓட்டு போட ஆள் இருக்கனும். டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க. நல்ல தரமான பதிவுக்கு மட்டும் ஓட்டு, கமெண்ட் போடுவாங்க. எப்படி தரமான பதிவுனு கண்டு பிடிக்கறதா? அது எனக்கு தெரியாது.. ஏன்ன நான் பிரபல பதிவர் இல்லிங்கோ...ல்லிங்கோ...ங்கோ..கோ.

இப்பொ ஒரு பிரபல பதிவர்கிட்ட எப்படி நடந்துகணும் சொல்லுகிறேன் கேளுங்க. நீங்க புதுசா எழுத வந்தவரா இருந்தா அவர் எது சொன்னாலும் ஆமாம், ஆமாம் ஆமாம், நீங்க சொன்னா சரிதான், அருமையான கருத்து இப்படி சொல்லனும். எதாவாது எதிர்த்து கூறு கெட்ட தனமா கோள்வி கேட்டிங்க.... "டாய் சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம் இல்லை!!" அப்படினு இளைய தளபதி மாதிரி கோவ படுவாங்க. பயமா இருக்கு இல்ல? பயமா இருக்கு இல்ல? அப்பொ அவங்க கிட்ட கேள்வி கேக்காத. எழுதி இருக்கது புரியலனாவா?? உனக்கு புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன வாய மூடிட்டு படிச்சிட்டு வா பங்காளி.

என்னாது நீங்களும் பிரபல பதிவரா?? அப்பொ சரி நீங்க என்ன சொன்னாலும் கருத்துதான். உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் இல்லைன வரவேற்கிறேன் அப்படினு சொல்லுவாங்க. தைரியமா உள்ள போங்க. அவ்வளோ ஏன் நீங்க நக்கல் அடிச்சாலும் பிரச்சனை இல்லை because நீங்க இரண்டு பேரும் பிரபல பதிவர்ஸ் பாஸ். உங்களுக்குனு பதிவுலகத்துல ஒரு இது இருக்கு... அதான்பா பிரிஸ்டீஜி... நேத்து வந்தவன் எல்லாம் கேள்வி கேட்டா அந்த அது... இதுவாகிடாது??

ஐயோ!! முன்னாடியே சொல்லனும் நெனச்சேன் மறந்துடேன். சார் / மேடம் இது யார பத்தியும் எழுதின புனைவு இல்லிங்கோ ஒரு வேலை நீங்க பிரபல பதிவரா இருந்து எதாவது சில விஷயம் உங்க கூட ஒத்து போச்சினா அது ஒரு தற்செயலான நிகழ்வு. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உங்கள் மனதை இந்த பதிவு புண்படுத்தி இருந்தால் நான் ரொம்ப வருத்தபடரேன் பிரபல பதிவர் அவர்களே. உங்களால இந்த நக்கல ரசிச்சி சிரிக்க முடிஞ்சா சிரிங்க. முடியலையா அடுத்த பதிவுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா வரணும். ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ...


எலேய் மக்கா!! மறுபடியும் சொல்றேன் ஓட்டு, கமெண்ட் போட்டு மாட்டிக்காத. யாராவது பிரபல பதிவர் கோபபட்டு என்னை கிழி கிழினு கிழிச்சா ஜாலியா ப்ளாக் மூடிட்டு புது பேர்ல புது ப்ளாக் ஆரம்பிச்சி நக்கல் அடிப்பேன்... என் கைல இருந்து கம்பியூட்டர பிடுங்கி கடல்ல போடர வரை நக்கல் அடிப்போன். அட பிடுங்கி போட்டாலும் கவலை இல்லிங்க... ஏன்னா இது ஆபிஸ் கம்பியூட்டர் நீங்க பாத்து சூதானமா இருந்துகோங்க..... :)))

டிஸ்கி : பிரபல பதிவர்.... அட்ரா அட்ரா சொல்லி பாத்தாலே ஒரு கெத்தா இருக்கு. எப்படியாவது ஒரு பிரபல பதிவர் ஆகிடனும்.
.

Saturday, October 02, 2010

ஒரு சந்தேகம்....

ஆல் அல்ல கை, நல்ல கை, நொல்ல கை, அரசியல் பண்றவங்க, பின்னாடி இருந்து குத்தர துரோகிங்க, புது பதிவர், பிரபல பதிவர், நாட்ட திருத்த வந்த நாட்டாமைங்க எல்லாருக்கும் வணக்கம்!!

எனக்கு ஒரு விஷயம் புரியல அதான் உங்க கிட்ட விளக்கம் கேக்கலாம் வந்தேன். கும்மி அடிக்கலாமா அடிக்கா கூடாதா? மொக்கை போடலாம போட கூடாதா? உங்ககிட்ட சொம்பு இல்லைனாலும் பரவாயில்லை வந்து தீர்ப்பு சொல்லுங்க.. பாதி பேர் கும்மி/மொக்க ஜாலியா இருக்கு சொல்றிங்க பாதி பேர் என் ப்ளாக் புனிதம் கெட்டு போச்சு சொல்றிங்க. நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுதல சார்.... ஐயோ சார்னு சொல்லிட்டேன் ஆண்னாதிக்கவாதி சொல்லுவிங்க. First ல இருந்து சொல்றேன் நாங்க எல்லாம் நாட்டை திருத்த பதிவு எழுத வரவில்லை.

எங்களுக்கும் தனி மனித வாழ்க்கைல நிறைய பொறுப்பு இருக்கு, ஆபிஸ் போனா Bank Recon, collection, balance sheet, auditing, flow chart, Server Down, Spam mails, Admin work, telephone calls இப்படி ஆயிரம் டென்ஷன் இருக்கு. இராவணன் விக்ரம் சொல்ற மாதிரி (தலைக்குள்ள ஆயிரம் காட்டு கூச்சல்). நாங்க மன இருக்கத்த குறைக்க ஜாலியா எழுதறோம், கும்மி அடிக்கிறோம். ஏற்க்கனவே மூளை சூடாகி ஆவி பறக்குது இதுல இங்கையும் வந்து சீரியஸ் மேட்டர் படிக்கனுமா?? மேதாவிதனத்த காட்டர மாதிரி விவாதிச்சி மண்டை காயனுமா??

சசசசசாமி நீங்க எல்லாம் பதிவ படிச்சி அறிவ வளத்துகோங்க வேண்டாம் சொல்லவில்லை ஆன எங்கள விட்டுங்க. எதாவது புது விஷயம் எழுதி இருந்தாலும் பரவயில்லை. உங்களுக்கு முன்னாடி நூறு பேர் எழுதிய விஷயத்த நீங்க 101வது ஆள எழுதுவிங்க அதை படிக்கலனா கோவபடறிங்க. படிக்கிற மாதிரி எழுதறது உங்க கைல தான் இருக்குங்க...

தேவா அப்படினு ஒரு பிரபல பதிவர்....  ஹிப்ரூ மொழியில் இன்னும் எழுதும் ஒரே பதிவர், தமிழ்ல எழுதுங்க சார், புரியர மாதிரி எழுத தெரியாத அப்படினு அவர பல கமெண்ட் அடிச்சி இருக்கேன். அவர் கோவபடல அதே கையால கவிதை, கதை சூப்பர் மாப்ஸ் கமெண்ட் போட வச்சாரு. அதான் சார் ஒரு எழுத்தாளன் வெற்றி (எவ்வளோ காசுடா வாங்கின கேக்காதிங்க. நான் பாராட்டி அவருக்கு சல்லி காசுக்கு புண்ணியம் இல்லை). 

அப்படி உங்க ப்ளாக்ல கும்மி அடிக்க கூடாத? கமெண்ட் மாட்ரேஷன் போட்டு தொலைங்க சார் / மேடம்... (ஐயோ!!! சார் அப்படினு முதலில் சொலிட்டேன்...). சரிரிரி உங்க ப்ளாக் உங்க இஷ்டம் மாட்ரேஷன் போட வேண்டாம், நீங்க எல்லாம் மெத்த படிச்ச மேதாவிகள் ஒரே ஒரு வார்த்தை நாகரிகமா சொல்லுங்க இங்கு கும்மி அடிக்காதிர்கள் நண்பர்களேனு. எங்களுக்கும் ஆண்டவன் கொஞ்சம் சுயமரியாதை, சுய கௌரவம் எல்லாம் வச்சி தொலைச்சிடான். நீங்க சொல்லி கேக்கலனா வெளிய போட நாயே சொல்லுங்க.

நாகரிக சீமான்களே, சீமாட்டிகளே நான் தற்குரிதான் ஆனா கும்மி அடிக்கிறவன் எல்லாம் தறுதலை, பொறம்போக்கு, மொள்ளமாரி நீங்க நினைக்கறது தப்பு. அந்த குரூப்ல Admin, Auditor, HR, Majestic Mechanical Engineer, Bio Medical Engineer, Marine Engineer, System Admin, Programmer இப்படி பல புத்திசாலிங்க இருக்காங்க அதனால நீங்க நல்லா எழுதினா அவங்களூம் கண்டிப்பா ரசிப்பாங்க. சக்கரை இருக்க இடத்துக்கு எறும்பு தான வரும். சும்மா சக்கரைனு லேபிள் ஒட்டிட்டு ஏன் எறும்பு வரல? இந்த கும்மி அடிக்கிற பயலுக கும்மி அடிக்கிற நேரம் ஊர் எல்லாம் போய் அங்க சக்கரை கொட்டி கிடக்கு சொல்ல கூடாதா? இப்படி எல்லாம் கேக்காதிங்க சாமிகளா. எப்பவாது நாங்க நல்லா கும்மி இருக்கோம் வந்து பாருங்க அப்படினு கூப்பிட்டு இருக்கமா?

உங்களுக்கு பிடிச்சத நீங்க செய்ங்க, படிங்க... எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்ரோம், படிக்கிறோம்...

டிஸ்கி : யார் மோலயும் கோவபட்டு இதை எழுதலிங்கக்கா / எழுதலிங்கனா. மனசுல தோனுச்சி கொட்டிட்டேன்... இன்னும் நிறையா விஷயம் இருக்கு... ஆனா இதுக்கே பதிவு பெருசா இருக்கு கலாய்ப்பனுங்க.

.